எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 22, 2008

உங்களோடு போட்டி போடுவேனா?? :((((((((

kannabiran, RAVI SHANKAR (KRS) said

//சம்பந்தப் பெருமான் மேல் அடியேனுக்கு உங்களை விட பக்தியும் காதலும் அதிகம்!//

கேஆரெஸ், உங்களோடு நான் என்னிக்குப் போட்டி போட்டிருக்கேன்? நான் எனக்குத் தான் பக்தி அதிகம்னு ஒருநாளும் சொன்னதில்லையே??? அப்படித் தெரியும்படி எழுதி இருந்தால் மன்னிச்சுக்குங்க! :((((((((

//என்றும் ஆனதால் "தான்" காரைக்கால் அம்மையாருக்கு இல்வாழ்க்கை "மறுக்கப்பட்டது"-ன்னு!
அது தான் மாபெரும் தவறு!//

எங்கே மறுத்தாங்க?? இல்வாழ்க்கை நடத்தும்போது தானே அவங்களை இறைவன் ஆட்கொண்டு இன்னிக்கு அதைப் பத்திப் பேசறோம். அந்தம்மாவும் சும்மா ஏதோ கல்யாணம் செய்துகிட்டோம், ஏதோ மாம்பழத்தை வரவழைச்சோம், அப்புறம் கணவனோடு குழந்தை, குட்டி பெத்துட்டுச் சும்மா இருக்கலாம்னு இருக்காம அவங்களோட தனித் தன்மையைக் காட்டப் போய் அந்த மனுஷனும் இவங்களோட தெய்வீகத் தன்மையைப் புரிந்து கொண்டு விலகிப் போயிட்டான், குடும்பம் நடத்தி இருந்தாங்கன்னா, குழந்தை, குட்டி பிறந்து இருந்து சாதாரண வாழ்க்கை நடத்தி இருந்தால் இவங்களுக்கு இப்படி ஒண்ணு நடந்ததே தெரிஞ்சிருக்குமா சொல்லுங்க, அதுக்காகவாவது காரைக்கால் அம்மையாருக்கு நன்றி சொல்லுவோமே! ஆனால் இந்த மாதிரி நடந்தப்புறமும் அவங்க கணவன் அவங்களை விட்டு விலகலைனாலோ, இல்லை, இவங்களோடேயே குடித்தனம் செய்தான்னாலோ,, குழந்தை குட்டி பெத்துக்கிட்டிருந்தாலோ அப்போ என்ன சொல்லி இருப்போம்? அப்போவும் அந்தக் கணவன் தான் வாங்கிக் கட்டிக்கணும். எப்படிப் போனாலும் உதைக்குதே?? என்ன செய்யறதுனு புரியலை! அதையும் யோசிக்கணுமோ?

//அதனால் தான் கேட்டேன், அதை விட அற்புதங்கள் புரிந்த சம்பந்தருக்கு ஏன் மறுக்கப்படவில்லை-ன்னு?//

எத்தனை முறை கேட்டாலும் சம்பந்தருக்கு நடந்த திருமணம் கட்டாயத் திருமணம். பெரியோர்களின் வற்புறுத்தலால் நடைபெறும் திருமணம் அக்னியை வலம் வரும்போதே நிறைவும் பெற்று விடுகின்றது.

இதோ சம்பந்தர் திருமணம் பற்றிய தேவாரக் குறிப்புகள்:-

சம்பந்தரிடம், "வேதநெறியை நிலைநாட்டிய தாங்கள் அவ்வேதம் சொல்லும் வேள்விகள் செய்வதற்கு வேதத்தில் விதித்தபடி மணம் செய்துகொள்ளவேண்டும்" எனப் பெரியவர்கள் வேண்டுகிறார்கள்.

சில பெரிய புராணப் பாடல்கள் கீழே.

தேவாரம்

நாட்டுமறை முறையொழுக்கம் ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார் கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென விண்ணப்பம் செய்தார்கள்.

உலகியல் நிலையில், மறைவழிபட்ட ஒழுக்கத்தை ஞானசம்பந்தருக்கும் இசைவித்தலை உள்ளத்தில் கொண்டு, குற்றமில் லாத மறைநெறியில் சொல்லப்படும் செயற்பாடுகளுடன் (சடங்குகளுடன்) கூடிய வேள்விகளைச் செய்வதற்கு, உரிமையைப் பெறும் பொருட்டுத் தாங்கள் ஓர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.

குறிப்புரை:
`போனகருக்கும்' என்றவிடத்துவரும் உம்மை அவர் தம் சிறப்புணர நின்றது. ஞானத்தின் திருவுருவாக விளங்கும் ஞானசம்பந்தருக்கு, மறைவழிப்பட்ட செயற்பாடுகளோ, அவற்றைச் செய்தற்கு என ஓர் இல்வாழ்க்கையோ வேண்டுவதின்று என்பது போதர நின்றது.
----------------
இங்ஙனம் கூறிய அவர்களின் சொல்லைக் கேட்டு, மாதவத்தின் கொழுந்தென விளங்கும் ஞானசம்பந்தர், சுற்றங்கள் பொருந்திய பெரிய பாசத் தொடக்கினை, விட்டு நீங்குவதற்காக நிலைமை உடையவராகி, விடைக்கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருவடி ஞானமான உயர்ந்த சிவஞானத்தை முன்னே பெற்றவர் ஆதலால் அவர்களின் மொழிக்கு இசையாமல் `நீங்கள் கூறுவது பொருந்திய மொழியாயினும், அது என்னளவில் வேண்டாத ஒன்றாகும்' எனக் கூறியருள,
-------
அம் மறையவர்கள் மேலும் கைகூப்பித் தொழுது, ஞானசம்பந்தரிடம் அறிவிப்பாராய், பெரிய மண்ணுலகில் மறைவழிவரும் வழக்கினை நீர் உயர்த்தியருளினீர் ஆதலின், அவ் வழிவரும் முறையில் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களுடன் கூடிய அப்பெருநெறியில் ஒழுகும் திருமணத்தைச் செய்தருளுதற்குத் திருவுள்ளம் கொள்ளல் வேண்டும் என்று கூற,
------
மறைவாழ அந்தணர்தம் வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார் தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில் பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார் தமைத்தொழுது மனங்களித்தார்.

மறைகள் வாழ்வு அடையவும், அந்தணர்களின் மறைவழிப்பட்ட வாய்மையால் வரும் ஒழுக்கம் வாழ்வடையவும், அந்தச் சுற்றத்தார்களுக்கு அருள்செய்து, அவர்களின் வேண்டுகோளுக்கு ஞானசம்பந்தர் இசைவு தெரிவிக்கவும், பிறைச் சந்திரன் வாழ்கின்ற திருமுடியில் பெரிய நீர்க் கங்கையுடன் பாம்பையும் அணிந்த நீலகண்டரான இறைவரை வணங்கி, அச்சுற்றத்தார் மகிழ்ந்தனர்.
--------------

இப்போ காரைக்கால் அம்மையாருக்கு நடந்தது பற்றிய ஒரு தொகுப்பும், மூத்த திருப்பதிகம் அவர் எப்போது பாடினார் என்பது பற்றிய ஒரு தெளிவும். திருவாலங்காட்டில் இறைவனைத் தரிசனம் செய்த பின்னரே மூத்த திருப்பதிகம் பாடினார் எனப் பல நூல்களும் சொல்கின்றன.

//மாங்கனியின் மாயம்


அவற்றைக் கேட்ட பரமதத்தன் இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையாயின் பிறிதொரு கனியையும் இவ்வாறே வருவித்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டனன். புனிதவதியார் அவ்விடத்தை விட்டுத் தனியே சென்று இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாதிருக்கப் பிறிதொரு மாங்கனி அருள வேண்டு மெனச் சிவபெருமானை இறைஞ்சி நின்றார். இறையருளால் மற்று மொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான்.


மறுமணம்


இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான்.


புனிதவதியார் சந்திப்பு


இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் `அடியேன் உம் அருளால் வாழ்கிறேன். இவ்விளங் குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்` என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஓதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது` எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக` என்றான்.


பேய் வடிவம்


சுற்றத்தவர் `ஈதென்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என இறைவனை வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார். இதனைச் சேக்கிழார்,


ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி


இவனுக்காகத்


தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து


இங்கு உன்பால்


ஆங்குநின் தாள்கள் போற்றும்


பேய்வடிவு அடியேனுக்குப்


பாங்குற வேண்டும் என்று பரமர்தாள்


பரவி நின்றார். (தி.12 காரைக்.49)


ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே


மேல்நெறி உணர்வுகூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்


ஊனுடை வனப்பை எல்லாம் உதறிஎற் புடம்பேயாகி


வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்


(தி.12 காரைக். 50)


எனத் தெரிவித்தருள்கிறார். அம்மையாரும் தாம் அருளிய அந்தாதியில்


பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது


உறினும் உறாதொழியுமேனும் - சிறிதுணர்த்தி


மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய


நற்கணத்தில் ஒன்றாய நாம் (85)


எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.//


முதலில் அம்மையார் பாடியது அற்புதத் திருவந்தாதியும், திரு இரட்டை மணிமாலையுமே ஆகும். அதில் இருந்து சில பாடல்கள்.



யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். பாடல் எண் 7/ அற்புதத் திருவந்தாதி


எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.

அற்புதத் திருவந்தாதி பாடல் எண் 10


சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.

திரு இரட்டை மணி மாலை பாடல் எண் 6

திருக்கைலை சென்று திரும்பியதும் திருவாலங்காட்டில் இறைவனின் நடனத்தைக் காணும் ஆசையால் வந்தபோது பாடியவையே மூத்த திருப்பதிகம் ஆகும்.

மூத்த திருப்பதிகம் பாடல் எண் 1

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

மூத்த திருப்பதிகம் பாடல் எண் 7

கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான் தடி தின்றணங் காடு காட்டில்
கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்
அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே



கேஆரெஸ்ஸுக்கு: மத்தவங்களும் வந்து கருத்துச் சொல்லட்டும்னு சொல்லி இருந்தீங்க, ஆனால் நம்ம பக்கம் யாரும் வர மாட்டாங்கனு தெரியாது போல! :))))) அதான் நானே சொல்லிட்டேன். மத்தபடி இனி உங்கள் கருத்து எதுவோ அப்படியே!

14 comments:

  1. //ஆனால் நம்ம பக்கம் யாரும் வர மாட்டாங்கனு தெரியாது போல!//

    உங்க பக்கம் வந்துக்கிட்டே இருக்க என்னை மறந்துட்டு (?) இப்படிச் சொல்லீட்டீங்களே. நெஞ்சம் துடிக்கிறது... இரத்தம் கொதிக்கிறது... இந்த அநீதியைக் கேட்பாரிலையா!

    (இருங்க... ஒரு ஜோடா குடிச்சிக்கிறேன். மூச்சு வாங்குது :)

    என்ன, வருவேன், ஆனா உருப்படியா கருத்துன்னு ஒண்ணும் சொல்ல மாட்டேன்... அம்புட்டுதேன் :)

    ReplyDelete
  2. @கவிநயா, நீங்க வேறே!:)))))) நான் சொன்னது சிஷ்யகேடிங்களைப் பத்தி, நீங்க தான் ஜோதியிலே ஐக்கியமே ஆகலையே?? சிஷ்யகேடிங்க எல்லாம் நான் மொக்கை போஸ்ட் போட்டால் தான் ஆதரவுனு அறிவிப்பே வெளியிட்டிருக்காங்களே, உங்களுக்குத் தெரியாது போல! :))))))))))

    ReplyDelete
  3. அதிலேயும் கொத்தனார் பாருங்க, மொக்கைப் பின்னூட்டத்தைக் கூட விடமாட்டார், எப்படியோ மூக்கிலே வேர்த்து வந்துடுவார்! :P:P:P

    ReplyDelete
  4. //சிஷ்யகேடிங்க எல்லாம் நான் மொக்கை போஸ்ட் போட்டால் தான் ஆதரவுனு அறிவிப்பே வெளியிட்டிருக்காங்களே//

    உண்மை.... :))

    ReplyDelete
  5. அட, அடியேன் போடும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு ஒரு ஒரு பதிவு போடறீங்களா? சூப்பரோ சூப்பர்! :)

    இதுக்கு சென்ற பதிவிலேயே பதில் சொல்லி இருக்கலாமே! எதுக்குத் தனிப் பதிவு? :)

    //சம்பந்தப் பெருமான் மேல் அடியேனுக்கு உங்களை விட பக்தியும் காதலும் அதிகம்//

    பக்தியில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! அடியேன் அப்படிச் சொல்ல வரவில்லை!
    ஏதோ சம்பந்தப் பெருமானைக் கம்பேரிசனுக்கு எடுத்துக்கிட்டு சைவ சமயத்தைக் கலாய்க்கப் புகுந்தேன் என்று கிளப்பி விட்டதால் அதான் அப்படிச் சொன்னேன்!

    //எத்தனை முறை கேட்டாலும் சம்பந்தருக்கு நடந்த திருமணம் கட்டாயத் திருமணம்//

    அதைத் தானே நானும் சொல்லுறேன்!
    ஏன் கட்டாயத் திருமணம் பண்ணி வச்சீங்க (வச்சாங்க)?

    நெசமாச் சொல்லுங்க! நான் கேட்குற கேள்வி உங்களுக்குப் புரியுதா? இல்லீங்களா?

    நீங்கள் என் பதிவில் என்ன சொன்னீங்க?
    இதோ:
    //அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது//

    அவளுக்கு இப்படி ஒரு நியாயம் வழங்குனீங்க! இப்ப அதே நியாயத்தைச் சம்பந்தருக்கும் வழங்குங்க!

    அவர் படைக்கப் பட்ட நோக்கம் தான் அத்தினி பேருக்கும் தெரியுமே! அப்புறம் ஏன் கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சாங்க?
    அவர் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவருக்கும் மறுக்கப் பட வேண்டியது தானே?

    ஆக பெண் படைக்கப்பட்டதன் நோக்கம் தெரிய வந்தப்போ, அவளுக்கு மறுத்தது! ஆனா ஆண் படைக்கப்பட்ட நோக்கம் தெரிஞ்சும் கூட, அவருக்கு மறுக்காம, கட்டாயக் கல்யாணம் செஞ்சி வைச்சது!

    இது தான் நியாயமா? இந்த நியாயத்தைக் கேட்டதற்குத் தானே என்னை "இப்படிப் பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள்"-ன்னு அங்கிட்டு சொன்னீங்க?

    ReplyDelete
  6. * இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?
    * இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?//

    இல்லைதான்.
    இயற்கையாக பெண்களுக்கு லிபிடோ குறைவு. ஆண்களுக்கு அதிகம். அதனாலதான்.
    ஆண் இல்லாம பெண் இருந்துடமுடியும். உண்மையில் குழந்தைகள் பெற்ற பின் அவர்கள் கவனம் அவர்கள் மேல்தான்.
    ஆனால் ஆண் பலகாலத்துக்கு அப்படி இருக்க முடிவதில்லை

    அது சரி, ஏன் ஒரு மனிதனின் நடத்தை ஒரு சமுதாயத்தையே வம்புக்கு இழுக்கிறது? பரம தத்தனின் மனத்தடையை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

    கணவன் ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்று தோன்றினால் பெண்ணால் அவனை தெய்வத்தைப்போல தொழ முடியும். அவனுக்கு அப்படியே தன்னை அர்பணிக்க முடியும். அப்படித்தானே செய்ய சொல்லி இருக்கு? ஆணால அப்படி செய்ய முடியாது இல்லையா? அது இயற்கை இல்லை.

    * அவள் விருப்பத்துக்கு மாறாக மறுக்கும் உரிமை யாருக்கு இருக்கு? எப்படி மறுக்கலாம்? என்ன நியாயம் இது?
    அவள் விருப்பத்தை யார் கேட்டர்கள்? யார் மறுத்தார்கள்? பரமதத்தனால் அவளுடன் குடும்பம் நடத்த மனத்தடை இருந்தது போய் விட்டான்.


    * சம்பந்தப் பெருமானின் படைக்கப்பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவருக்கு ஏன் மறுக்கப்படவில்லை?

    மறுக்க அவசியம் இல்லை.

    ReplyDelete
  7. ஹிஹி, உங்க பதிவு + பின்னூட்டம் பாத்ததும் இது தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

    கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?

    கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.

    கீமே: என்ன பழம்?

    கேஆரெஸ்: வாழைப்பழம்

    கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    கேஆரேஸ்: அதான் மேடம் இது. :)))

    ஆமா,

    புனிதவதி யாரு?
    ஞானசம்பந்தர் யாரு?
    மாம்பழம் எந்த கலர்ல இருக்கும்? :))

    ReplyDelete
  8. போட்டி பலமா இருக்கே ;)

    ReplyDelete
  9. அன்பு ரவி மற்றும் கீதா,
    ரவியின் கேள்வி சமூகத்தை முன்னிறுத்தி கேட்கப்பட்டது.

    ஆனால் திலகவதியை மறுதளித்தது சமூகம் அல்லவே? பரமதத்தனே திலகவதியுடன் வாழப் பயப்படுகிறான்.

    யாதும் கூறாமல் ஓடி விடுகிறான்.

    சமூகம் நீதி,வாழ்வு கிடைக்க வேண்டும் என்று கருதியே பரமதத்தன் இருக்கும் இடம் தேடிப் போகிறார்கள்.

    ஆனால் திலகவதியைப் பார்த்தவன் உடனே காலில் விழுந்து விடுகிறான்.

    அந்த நிலையில்தான் அம்மை இறையை வேண்டி பேய் உருவம் வேண்டுகிறார்.

    ஆக அம்மை விரும்பியும்,சமூகம் விரும்பியும் கணவன் விரும்பாததால் திலகவதிக்கு வாழ்வு மறுக்கப் பட்டது.

    அதை மீறி மறுமணம் செய்து வைக்கும் அளவுக்கு சமூகநிலை இல்லை.

    பிள்ளையார் விதயத்தில் சுற்றம்,சமூகம் விரும்பியது;அவர் முதலில் விரும்பாவிடினும் பின்னர் ஒத்துக் கொள்கிறார்.

    எனவே சமூகத்தின் மேல் குற்றம் சுமத்த முடியாது என்பதே யதார்த்த நிலை.

    ஆனால் சம்பந்தர் தீப்புகுந்ததே ஒரு சதிச்செயல் என்ற நோக்கும் உள்ளது.(அசஞா கூட ஒருமுறை எழுதியதாக நினைவு..)

    ReplyDelete
  10. @thivaa,
    @ambi,
    @puli, thankees, net connection chothappal so no answers.

    @arivan, A.Sa.Jnanasambandar நீங்க சொல்றாப் போல் சொல்லலைனு தான் படிச்ச நினைவு, எதுக்கும் மீண்டும் பார்க்கணும், நன்றி கருத்துக்கு. இணையம் சரியாக வரவில்லை, ஆகையால் பதில் சரியாக் கொடுக்க முடியவில்லை! :(((((

    ReplyDelete
  11. //திவா said...
    * இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?
    * இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?//

    இல்லைதான்//

    ஒப்புக் கொண்டமைக்கு நன்றி திவா சார்! மேட்டர் அவ்ளோ தான்! :(

    //அது சரி, ஏன் ஒரு மனிதனின் நடத்தை ஒரு சமுதாயத்தையே வம்புக்கு இழுக்கிறது?//

    இங்கே பரம தத்தனின் நடத்தையை அந்தச் சமுதாயமும் சரி என்றே ஆதரித்தது! இன்னமும் சரி என்றே ஆதரித்து, அவனுக்கு உற்சவம் நடத்திக்கிட்டு இருக்கு! அதனால் தான்!

    //ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்று தோன்றினால் பெண்ணால் அவனை தெய்வத்தைப்போல தொழ முடியும். அவனுக்கு அப்படியே தன்னை அர்பணிக்க முடியும். அப்படித்தானே செய்ய சொல்லி இருக்கு?//

    எங்கே சொல்லி இருக்கு?

    //ஆணால அப்படி செய்ய முடியாது இல்லையா? அது இயற்கை இல்லை//

    ஏன் செய்ய முடியாது? ஏன் இயற்கை இல்லை!

    //அவள் விருப்பத்தை யார் கேட்டர்கள்? யார் மறுத்தார்கள்?//

    உயர் திரு. ஆன்மிகப் பெருந்தலைவி. கீதாம்மா அவர்களின் பின்னூட்டத்தைப் படியுங்கள்!
    ***//அவள் படைக்கப்பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே அவளுக்கு இல்வாழ்வு மறுக்கப்பட்டது//***
    இதைச் சொல்லியது கீதாம்மா!

    ReplyDelete
  12. //அறிவன்#11802717200764379909 said...
    ஆக அம்மை விரும்பியும்,சமூகம் விரும்பியும் கணவன் விரும்பாததால் திலகவதிக்கு வாழ்வு மறுக்கப் பட்டது//

    இங்கே தான் நீங்க புரிந்து கொள்ளவில்லை அறிவன் (ஐயா)!

    கணவன் விரும்பலை - சரி ஓக்கே!
    ஆனால் அதற்கு அவன் சொன்ன காரணத்தைச் சமூகமும் சேர்ந்து தானே ஆதரித்தது! அவளையே திருப்பியது! நிராதரவாக விட்டது!
    காரணம்: அவள் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்தது. அதனால் இல்வாழ்வு மறுக்கப்பட்டது!

    //பிள்ளையார் விதயத்தில் சுற்றம்,சமூகம் விரும்பியது;அவர் முதலில் விரும்பாவிடினும் பின்னர் ஒத்துக் கொள்கிறார்//

    விரும்பாத ஆளுடைய பிள்ளைக்குக் கட்டாயப்படுத்தி செஞ்சாங்க, சரி!
    சமூகம் விரும்பியது!
    காரணம்: அவர் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்தது.(அதனால் இல்வாழ்வு மறுக்கப்படவில்லை!)

    அதானே! ரெண்டையும் பொருத்திப் பாருங்க!
    பெண்ணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சா = நோ!
    ஆணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சாலும் = எஸ்!

    Cant you not just see that?

    //ஆனால் சம்பந்தர் தீப்புகுந்ததே ஒரு சதிச்செயல் என்ற நோக்கும் உள்ளது.(அசஞா கூட ஒருமுறை எழுதியதாக நினைவு..)//

    :)
    நான் சொல்லட்டுமா? இதை விட பத்திக்கிட்டு எரியும்!

    ReplyDelete
  13. //ambi said...
    கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?

    கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.

    கீமே: என்ன பழம்?

    கேஆரெஸ்: வாழைப்பழம்

    கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    கேஆரேஸ்: அதான் மேடம் இது. :)))//


    வாய்யா அம்பி! நான் ஒரு கொய்யாப் பழக் கதை சொல்லட்டுமா!

    கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?

    கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.

    கீமே: என்ன பழம்?

    கேஆரெஸ்: கொய்யாப்பழம்

    கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    கேஆரேஸ்: இன்னோன்னு இதோ என் கையில் இருக்கு மேடம்!

    கீமே: அதெல்லாம் எனக்குத் தெரியாது! நான் பார்க்க மாட்டேன்! என் கையை மட்டும் பாத்து பேசு!
    ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    கேஆரேஸ்: ஐயோ! இன்னோன்னு இதோ என் கையில் இருக்கே மேடம்!

    கீமே: என்ன வெள்ளாடுறியா? நான் அதெல்லாம் பார்க்கவே மாட்டேன்! நீ என் கையை மட்டும் பாத்து பேசு!
    ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    கேஆரேஸ்: ஐயோ! இந்தாங்க! ஒரு கையில் அது இருக்குல்ல? இன்னோரு கையில் இப்ப இதைப் புடிங்களேன் சொல்றேன்!

    கீமே: ஏய்...என்ன வெள்ளாடுறியா? அதெல்லாம் வாங்கிக்க மாட்டேன்! ஒழுங்கா பதில் சொல்லு! ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?

    :)))))

    ReplyDelete
  14. //ambi said...
    புனிதவதி யாரு?
    ஞானசம்பந்தர் யாரு?
    மாம்பழம் எந்த கலர்ல இருக்கும்? :))//

    பெருமாளுக்கே குடை ஒடித்து ரெயின் கோட் மாட்டும் அம்பி சார்! நீங்க நடிச்சது போதும் :)

    திவா சார் கிட்ட ஒரு நேர்மை இருக்கு! சொல்லிட்டாரு!
    உம்மால அப்படிச் சொல்ல முடியலை! அம்புட்டு தான்!

    //
    * ஆம்பிளை ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்று தோன்றினால் பெண்ணால் அவனுடன் வாழ முடியும்! அர்ப்பணிக்க முடியும்!
    * ஆனா பொம்பிளை ஆன்மீகத்தில் உயர்ந்தவள் என்று தோன்றினால் ஆணால் அவளுடன் வாழ முடியாது! அர்ப்பணிக்க முடியாது//

    போதுமா? அதான் உங்க அல்ட்டிமேட்டம்!

    நம பார்வதீ பதயே! அம்மா தாயே ஜகன்மாதா, மீனாட்சி என்னும் மானிடப் பெண்ணே! ஆன்மீகத்தில் உயர்ந்தவளே! தாயே! உன்னோடு சுந்தரேசன் வாழ முடியாதம்மா! வாழ முடியாது! :(

    சாரதா மணி தேவியார் - இராம கிருஷ்ண பரம ஹம்சர் திருவடிகளே சரணம்!
    பொன்னாச்சி - வில்லிதாசன் திருவடிகளே சரணம்!
    அருந்ததி அம்மையார் - வசிஷ்ட மகரிஷிகள் திருவடிகளே சரணம்!
    சூத்ரவதி - விஷ்வக்சேனர் திருவடிகளே சரணம்!

    அம்மா வேத மாதா காயத்ரி - நல்ல காலம் உனக்குத் துணை பேசப்படவில்லை! தப்பித்தாய்!

    ReplyDelete