எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 30, 2008

கிழக்கு வெளுத்ததம்மா, கீழ்வானம் சிவந்ததம்மா!

ஒரு வழியாய் ஒருவாரமாய்ப் பெய்து வந்த மழை இன்னிக்கு இல்லை. காலையில் சூரியன் உதயம் ஆனதைப் பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமா இருந்தது. விடாமல் பெய்த மழையினால் வெள்ளமான தெருக்களைத் தவிர, எங்க அம்பத்தூர் நகராட்சியில் அம்பத்தூர் ஏரியையும், இன்னொரு ஏரியையும் உடைத்து வேறே விட்டுட்டாங்க. எந்தவிதப் பாரபட்சமும் காட்டாத நீர் வெள்ளம் அனைத்து வீடுகளிலும் புகுந்தது. வியாழன் அன்று இரவு படுக்கும்போது ஒண்ணும் இல்லை. காலை மூன்று மணி வரையில் கட்டுக்குள்ளேயே இருந்த வெள்ளம், நாலு மணிக்கு எழுந்து செல்லும்போது பார்த்தால் படுக்கை அறையில் கணுக்கால் வரை வந்து கணினி வைத்திருக்கும் டேபிளையும் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.

ஏற்கெனவே போன மழையில் சமையல் அறையில் மேலே இருந்து தாரையாகக் கொட்டியது, அப்படித் தான் இந்த அறையில் வந்திருக்குமோனு நினைச்சால் அப்படி இல்லை. கூரை சுத்தமாய் இருந்தது. மேலே இருந்து வரலைன்னா பின்னே எப்படினு யோசிச்சுட்டே சமையல் அறைக்குப் போனால் அங்கே வெள்ளம். நடைபாதையில் வெள்ளம். கொல்லைப் பக்கம் போய்க் கதவைத் திறந்தால் வராந்தாவெல்லாம் வெள்ளம் அடித்துக் கொண்டு உள்ளே வரும்போல இருந்தது. அங்கே இருந்தும் வந்திருக்கு. அதே போல் வாசலையும் திறந்து பார்த்தால் வாசல் வராந்தா, வெளியே உள்ள நடைபாதை தாண்டி தெருவெல்லாம் வெள்ளம் எதிர்வீடு வரை, தெருவில் அவர் மட்டும் போய் இறங்கிப் பார்த்தால் முழங்கால் தண்ணீர். பால் வரலை, மத்தவங்களுக்கெல்லாம், பாக்கெட் பால் வாங்கறதில்லை என்பதால் பால்காரர் எங்களுக்கு எடுத்து வந்துட்டார். மின்சாரம் இல்லாமல் தண்ணீர் எடுக்க மோட்டார் போடமுடியவில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் குளிக்கவோ, குடிக்கவோ தண்ணீர் இல்லை. நல்லவேளையாகக் கிணற்றை நாங்கள் மூடவில்லை என்பதால் தண்ணீரும் கிடைச்சது. காய்களும் இருந்தன.

எந்த வண்டியும் இன்று வரையில் உள்ளே வரமுடியலை. சைகிள் கூட. அவ்வளவு தண்ணீர். கொட்டும் மழையில் எரிவாயுக் கசிவை ரிப்பேர் செய்யவந்தவர் என்ன உங்க ஏரியா இவ்வளவு மோசமா இருக்குனு, நாங்க தான் முனிசபல் அதாரிடி மாதிரி எங்களைக் கேட்டுட்டுப் போனார். நேரம்! பேப்பர்காரர் சைகிளில் வைத்துப் பேப்பரைத் தூக்க முடியாமல் தூக்கிட்டு வந்து இன்னிக்குக் கொடுத்துட்டுப் போனார். தலை எழுத்து! இந்த அவலங்களுக்கு என்ன காரணம்? யார் காரணம்?? இன்னிக்குச் செய்தித் தாளையும், இன்னும் தொலைக்காட்சியையும் பார்த்தப்போ எங்களுக்கு வந்த தண்ணீர் ஒண்ணுமே இல்லைனு தெரிஞ்சது. எங்க தெருவுக்குப் பக்கத்திலேயே ஒரு தெருவில் வீட்டுக்குள் கட்டில் போட்டு உட்கார்ந்து அந்தக் கட்டில் விளிம்பு வரையிலும் தண்ணீர் தொட்டுக் கொண்டு ஓடுது. குடிசைவாசிகள் நிலைமை சொல்லவும், எழுதவும் வேண்டாம். இன்னும் மோசம். அதிலும் பாதாளச் சாக்கடை இல்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் குடி இருப்போர் அவங்க கழிவறைத் தண்ணீரை வெளியே விடறதாலே அந்தத் தண்ணீரும் சேர்ந்து ஒரே நாற்றமும், கொசுத் தொல்லையுமாய்த் தாங்க முடியாத துன்பம். இந்த அடிப்படை வசதிகளைச் செய்யாமல் ஒரு குடி இருப்பே வரமுடியாது மற்ற மாநிலங்களில் எல்லாம். ஆனால் நாம?

சரவணா ஸ்டோர்ஸ் எரியற வரைக்கும் வேடிக்கை தான் பார்த்துட்டு இருந்தோம்? இப்போ அதுவே மறந்துடலையா மீண்டும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் எல்லாம் நல்லாத் தானே வந்துட்டு இருக்கு? அடுத்த தீபாவளிக்கு அங்கே போய்த் துணி எடுக்கிறவங்க என்ன செய்வாங்க? இந்த மாதிரி யாரோ செத்தால் எல்லாம் கடையை மூடமுடியுமா என்ன? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அப்படித் தானே இந்த மழைத் தண்ணீரும் ஒவ்வொரு வருஷமும் இது பத்திப் பேசுவோம். ஆக்கிரமிப்பு, ஏரிக்குத் தண்ணீர் போகும் கால்வாயை மூடிட்டாங்கனு யாரானும் ஏதானும் சொல்லிட்டுத் தான் இருப்பாங்க, அதுக்காக நாம் அங்கே குடி வராமல் இருக்க முடியுமா என்ன? பார்க்கிறவங்களைப் பார்த்துக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்தால் தீர்ந்தது வேலை, முடிந்தது பிரச்னை. மழை வரச்சே பார்த்துக்கலாம்.


வீட்டுவேலை செய்யும் அம்மா இரண்டு நாட்களாய் வரலை. அவங்களுக்கும் மழைதானே? தண்ணீர் அங்கேயும் தானே போகுது? இப்போப் பேச ஆரம்பிச்சிருக்காங்க பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும். ஆக்கிரமிப்புகள் தான் காரணம் இத்தனை தண்ணீர்த் தேக்கத்துக்குனு. மழை நிற்கலைனால் இன்னும் மோசமாய் ஆகுமெனவும், நின்றாலும் ஒரு வாரம் ஆகும் நீர் வடியனும் சொல்றாங்க. கூவம் நதியைச் சாக்கடை ஆக்கின பெருமை மட்டுமில்லாமல் சரியானபடித் தூர்வாராததால் தண்ணீரை வாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை. அடையாறும் அப்படியே. தண்ணீர் திரும்பித் தானே வரும்? முகத்துவாரத்திலும் அடைப்பு. இதெல்லாம் மழைக்கு முன்னே செய்யவேண்டிய வேலைகள். வேலை இல்லைனு தவிக்கிறவங்களைக் கூப்பிட்டு இந்த வேலையை எல்லாம் செய்யச் சொல்லிக் கூலி கொடுத்து வயிறாறச் சாப்பிடச் சொல்லலாம்.

தினசரி ஒரு ஏரியானு வச்சுட்டு இதைச் செய்ய ஆரம்பித்தாலே வருஷம் பூராவும் செய்யவேண்டி இருக்கும். காவிரி ஆற்றில் எவ்வளவு மேடிட்டிருக்கிறது? அதுவும் அரசலாற்றின் அழகே போய், ஒரே ஆகாயத் தாமரையும், மற்ற விஷக் காளான்களும் முளைத்துத் தண்ணீரை உள்வாங்கும் சக்தியை இழந்து நிற்கின்றது. கிராமத்தில் கோடை காலத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு அந்த, அந்தப் பஞ்சாயத்தின் மூலம் இதை எல்லாம் செய்ய வைத்துக் கூலி கொடுக்கலாமே? வெறும் இலவசத்தால் வயிற்றை நிரப்பினால் போதுமா? இலவசம் கொடுக்க ஆரம்பித்ததும் மக்களுக்கு உழைக்கணும், உழைத்துச் சாப்பிடணும்னே தோணாமல் போயிடுமே? இதுக்கு என்ன வழி? கோடை காலம் வரை இது பற்றிப் பேசுவோம். அடுத்த மழைக்குள்ளாக இதை மறந்துட்டு, அடுத்த மழைக்கு மறுபடி ஆரம்பிப்போம்.

14 comments:

  1. இலவசமாக ஒரு மிதக்கும் வீடும் அது மூழ்கினாலும் ஒரு படகும் அதற்கு இலவசமாக கொடுக்கப்படும் - இது அடுத்த தேர்தலில் போது கொடுக்கப்போகும் வாக்குறுதி. :-))

    ReplyDelete
  2. //, எங்க அம்பத்தூர் நகராட்சியில் அம்பத்தூர் ஏரியையும், இன்னொரு ஏரியையும் உடைத்து வேறே விட்டுட்டாங்க.//

    அட ஏன்? உள்ளே பயிர் போட்டு இருந்திருப்பாங்களே! அதனாலயா?

    //நல்லவேளையாகக் கிணற்றை நாங்கள் மூடவில்லை என்பதால் தண்ணீரும் கிடைச்சது.//
    புத்திசாலிதான்!
    // காய்களும் இருந்தன.//
    போச்சுடா! என்ன குழப்பறீங்க?
    //கோடை காலம் வரை இது பற்றிப் பேசுவோம்.//
    அப்ப காவேரி பிரச்சினை பத்தி பேசலாம். அதான் சீசன்.
    // அடுத்த மழைக்குள்ளாக இதை மறந்துட்டு, அடுத்த மழைக்கு மறுபடி ஆரம்பிப்போம்.//
    அதுவும் வெள்ளம் வந்தாதான்!

    பேசாம கிராமத்து பக்கம் போங்க! இல்லாட்டா பேசிகிட்டே கூட போகலாம்.

    அட நம்ம குமார். ரொம்ப நாளாச்சு அவரோட ப்ளாக் பாத்து!

    ReplyDelete
  3. இப்போதைக்கு கடமை மட்டும்...இன்னும் படிக்கல ;)

    ReplyDelete
  4. வாங்க வடுவூர், ரொம்ப நாளாச்சு பார்த்து, மழை வெள்ளத்திலே வந்தீங்க போல?? :P:P:P:P
    கத்திப்பாரா பாலத்தைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் அதைக் குறித்து எழுதின உங்க பதிவு தான் நினைவில் வரும், என்னமோ போங்க! மழை நீர் போக வசதி இல்லாமல் பாலத்திலிருந்து கொட்டும் எல்லா மழை நீரும் கீழே உள்ள செர்வீஸ் சாலையில் நிரம்பி ஒரே வெள்ளக்காடு தான் போங்க. முன் யோசனையே இல்லாத பொறியாளர்கள்! :(((((((((

    ReplyDelete
  5. அப்புறம் மறந்துட்டேனே, உங்க வாக்குறுதி பலிக்கவும் சான்ஸ் இருக்கு என்பது தான் உண்மை! :((((((

    ReplyDelete
  6. @திவா, வாங்க, உங்க பதிவை விடப் பின்னூட்டம் பெரிசா இருக்கு போல?? வாங்க, மழை எல்லாம் எப்படி? கடலூரிலே??

    இந்த மழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?? நேத்திக்கு வெளுத்து வாங்கிடுச்சு போல மழை??

    ReplyDelete
  7. //பேசாம கிராமத்து பக்கம் போங்க! இல்லாட்டா பேசிகிட்டே கூட போகலாம்.//
    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் கத்தி சண்டை போட்டுக் கூடப் பார்த்தாச்சு, ஒண்ணும் நடக்கலையே? என்னை கிராமத்துக்கு அனுப்பறதிலே என்ன ஒரு சந்தோஷம்??? :P:P:P:P:P

    ReplyDelete
  8. கடமை வீரர் கோபிநாத், வாழ்க! வளர்க!

    ReplyDelete
  9. கீதா, சன் டிவில பார்க்கும்போதே பயங்கரமா இருந்தது.இந்தத் தடவை ரொம்பத்தான் மழை. இல்லையா.

    அம்பத்தூரில் வெள்ளம்னு நீங்களும் எத்தனை தடவை சொல்லியாச்சு. யாரு அக்கறை எடுத்துண்டு என்ன செய்வார்கள். பொறுப்புள்ளவர்களா ஆட்சி செய்கிறார்கள்.

    ReplyDelete
  10. // காய்களும் இருந்தன.//
    போச்சுடா! என்ன குழப்பறீங்க?//

    க்ர்ர்ர்ர்ர்ர் இது புரியலையா திவா?? எல்லாரும் பாலுக்கும், காய்கறிகள் இல்லாமலும் கஷ்டப் பட்டுட்டு இருந்தாங்க, எங்க கிட்டே நல்லவேளையா 2 நாளைக்கு ஏதோ ஸ்டாக் வச்சிருந்தோம். :))))))

    இப்போத் தான் பார்த்தேன், இந்தக் கேள்வியை! :)))))

    ReplyDelete
  11. வாங்க வல்லி, ஒரு நிமிஷம் ராத்திரி இந்த நேரத்திலே கமெண்டானு நினைச்சேன், அப்புறம்தான் புரிஞ்சது உலகம் சுற்றும் வாலிபி யின் இப்போதைய காம்ப் அமீரகம்னு!

    எங்கே நமக்கெல்லாம் விடிவு காலம் என்பது சொப்பனத்தில் தான் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த வருஷம் மழையில் சென்னையில் எங்கே பார்த்தாலும் பிரச்னை தான். மேற்கு மாம்பலத்தில் என் தம்பி இருக்கும் இடத்தில் எல்லாம் தொடர்ச்சியாய் 3 நாளைக்கு மின்சாரம், பால், தண்ணீர் வசதி எதுவும் இல்லை. அதுக்கு நாம பரவாயில்லைனு நினைச்சுப்பேன்.

    ReplyDelete
  12. @திவாண்ணா,

    எங்க கிராமத்தில் அழகா வீடு வாங்கி தரோம்னு நானும் தம்பியும் சொன்னோம். பிராட்பேண்ட் இருக்குமா?னு எதிர் கேள்வி கேட்டது யாருன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க... :)))

    இவங்க போடற மொக்கைக்கு டயலப் கனக்ஷனே ஜாஸ்த்தியாக்கும். :))

    ReplyDelete
  13. //அடுத்த மழைக்குள்ளாக இதை மறந்துட்டு, அடுத்த மழைக்கு மறுபடி ஆரம்பிப்போம்.
    //

    Amen

    ReplyDelete
  14. @அம்பி, இன்னிக்குப் பிறந்த நாள் ஆச்சேனு பேசாம விடறேன். :P:P:P:P

    வாங்க புலி, உங்க ஆமெனுக்கு ஒரு ஆமென்!

    ReplyDelete