எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 15, 2016

நிலாவும் ஆண்டாளம்மாவும்!


இன்னிக்குக் காலை ஐந்து மணிக்கு எடுத்தது!  இந்த மேற்குப் பக்கம் காவிரி இருப்பதால் குறுக்கே தடைகள் ஒண்ணும் இல்லை. ஆகையால் சந்திரனார் மட்டும் வந்திருக்கார்.

கொஞ்சம் தள்ளி நின்ற வண்ணம் எடுத்தது!

இன்னிக்கு ஐப்பசி (துலா)மாதக் கடைசி நாள் என்பதால் ஆண்டாளம்மா இன்னிக்குத் தான் கடைசியா காவிரித் தண்ணீரை ரங்குவுக்கு எடுத்துட்டுப் போவாங்க! இன்னிக்கு வந்தப்போ எடுத்த படம்.




தங்கக் குடத்தை எடுக்க நினைச்சுக் கடைசியில் ஆண்டாளம்மா வாழைப்பழம் வாங்கக் கிட்டே வந்ததில் அதை மறந்துட்டேன்! ஹிஹிஹிஹி, எல்லாம் ஒரு பயம் தேன்! :)))))))

13 comments:

  1. முதல் படத்திலேயே தங்கக் குடம் தெரிகிறது. நீங்கள் தவறவிடவில்லை. யானையின் மீதேறி தண்ணீர்க்குடம் கொண்டுவருபவருக்குப் பயமாக இருக்காதா?

    இருக்கற சிறிய சந்திரனைப் பெரிதாகக் காண்பித்திருக்கிறீர்கள் (கொஞ்சம் தெளிவில்லாமல் எடுத்து)

    ReplyDelete
    Replies
    1. ஜூம் பண்ணி எடுத்ததால் அப்படித் தெரியுதுனு நினைக்கிறேன். ஆனால் பொதுவாகவே வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கிறது. நிலவே தெளிவில்லாமல் இப்படித் தான் தெரிந்தது. :) கிட்ட வரச்சே தங்கக் குடத்துடன் எடுக்க நினைச்சு விட்டுப்போச்சு! :)

      Delete
    2. ஜூம் பண்ணினால் என் கேமராவிலும் கொஞ்சம் தெளிவில்லாமல்தான் வருகிறது. கடைக்காரரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..

      கீதா

      Delete
  2. ஆண்டாளையும், சந்திரனையாரையும் கண்டேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  3. மேகமூட்டத்திற்குள், தென்னங்கீற்றுகளுக்கிடையே நிலவு தெரிந்தால் தான் நிலவுக்கு அழகு.

    இப்படி பளிச்சென்று தனியாகத் தெரிவது ஏதோ சினிமா ஷாட் மாதிரி இல்லை?..

    ReplyDelete
  4. இது க்ராப்பிங் செய்த படமா

    ReplyDelete
  5. அறிவியல் விந்தையையும், ஆன்மிக உணர்வையும் கண்டோம்.

    ReplyDelete
  6. நிலாவும் ஆண்டாளம்மாவும்....என்றும் அழகு....

    ReplyDelete
  7. நிலவும் ஆண்டாளம்மாவும் என்ற தலைப்பை படுத்தவுடன் என் நினைவுக்கு வந்தது வல்லி அக்கா தான். அவர்களுக்கு ஆண்டாள் என்ற பெயர் உண்டு, நிலவை நேசிப்பவர்கள். அவர்களை பற்றிய பதிவோ என்ற எண்ணம் வந்து விட்டது. ஸ்ரீரங்கம் யானை பேர் ஆண்டாள் என்பது பதிவை படித்தவுடன் நினைவுக்கு வந்தார்கள்.
    யானையும், நிலாவும் அருமை. யானை வெகு வேகமாய் போவதால் படம் எடுப்பது கஷ்டம் தான்.

    ReplyDelete
  8. ஆண்டாள் அழகு! நிலவும் அழகு!

    ReplyDelete